April 19, 2024

துயர் பகிர்தல் ஆறுமுகம் விஜயபாலன்

திரு ஆறுமுகம் விஜயபாலன்

தோற்றம்: 02 மே 1954 – மறைவு: 25 ஏப்ரல் 2020

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Luton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விஜயபாலன் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜி(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சகிதன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மனோன்மணி, யோகேஸ்வரி மற்றும் இராஜபூபதி, இரத்தினபூபதி, தர்மபாலன்(ஜேர்மனி), பத்மநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சிவபாதசுந்தரம் மற்றும் நாகலிங்கம், இராசரத்தினம், சந்திரபாலன், சாந்தகுமாரி(ஜேர்மனி), ஜெயலக்‌ஷ்மி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, காத்தசாமி மற்றும் அன்னம்மா, சுந்தரம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இரத்தினம்(C.T.B) மற்றும் குமாரசாமி, விமலலோஜினி, சிவகுரு ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாஸ்வதி  அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Stopsley இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
ரகுMobile : +44 783 755 2491   
தேவிMobile : +44 740 588 5745