April 18, 2024

யாழ் போதனாவில் கொரோனா உறுதி?

கிளிநொச்சி – முழங்காவிலில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று (29) போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு இன்று (30) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வெளி மாவட்டத்தை சேர்ந்த மேற்படி பெண் கடந்த ஏப்ரல் 11ம் திகதி முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.

அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று இருந்தமை கடந்த 13ம் திகதி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.