März 29, 2024

இலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி!

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும்.  மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் இது அதிகமாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இலங்கைக்கு தனி விமானம் மூலம் மருந்துப் பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது .