April 24, 2024

கோட்டபாய அரசாங்கம் – மீண்டும் தமிழரை பட்டினியால் அழிக்க முயல்கிறதா?

இலங்கை அரசாங்கம் சலுகைகள் என அறிவித்த விடயங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்-அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கொவிட் – 19 என்னும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தில் – உலகமெல்லாம் சிக்குண்டு கிடக்கிறது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கின்றி உள்ளது
தொடர்ச்சியான ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டு – நோயின் தாக்கம் தொடர்பான அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் – அன்றாடம் உழைத்து வாழ்ந்த மக்களும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உழைப்புமின்றி- பொருளாதார பலமுமின்றி – பாரிய பட்டினி நிலையையும் – எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக – போரின் வடுக்களிலிருந்து மீளமுடியாத துன்பத்தில் வாழும் – வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் – பாரிய பட்டினிப் பிரச்சினையை இன்று எதிர்கொண்டுள்ளனர்.
போரின் பின்னரும் கூட – விவசாயம், மீன்பிடி போன்ற தற்சார்புடன் பொருளாதார வளத்துடன் வாழ்ந்த வடக்கு கிழக்கு மக்களின் – பொருளாதாரத்தையும் – கடல் மற்றும் விவசாய நிலங்களையும் தென்னிலங்கை முதலாளித்துவமே சுரண்டிவாழ்ந்த நிலையில் – இன்றைய ஆகக்குறைந்த தமிழரின் வாழ்வாதாரம் கூட முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் – சலுகைகள் என அறிவித்த விடயங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மீன் ரின், பருப்பு,முட்டை போன்ற பொருட்கள் சகாய விலையில் கிடைக்கும் எனக்கூறியதும், வங்கிக்கடன்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட சலுகை விடயங்களும் – ”கோட்டாவின் அதிரடி சலுகைகள்” என ஊடகங்களில் வெளிவந்த செய்தியாக மட்டுமே – உள்ளன. அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வடக்கு கிழக்கில் வாழ்வாதாரம் இன்றி அநேகர் – பட்டினியால் பரிதவிக்கும் நிலையில் – சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டுமே – மிகக்குறைந்த நிவாரணத்தை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது. அவர்களுக்குக்கூட ரூபா 5000/- தொகையை கடனாகவே வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோணா நோயிலிருந்து மக்களைக் காக்க முயற்சிப்பதாகக் கூறும் கோத்தபாய அரசாங்கம் – போலி வாக்குறுதிகள் ஊடாக – தமிழ் மக்களை ஏமாற்றி – பட்டினியால் மக்களைக் கொல்லப்போகிறதா? என்னும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
பாரிய இனவழிப்பின் மூலம் தமிழர் பொருளாதாரத்தை சிதைத்த – கோட்டபாய அரசாங்கம் – மீண்டும் தமிழரை பட்டினியால் அழிக்க முயலாமல் – உரிய நிவாரணங்கள் பாதிக்கப்படும் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். நன்றி,தாரகம்
Image may contain: 1 person
18
4 Shares
Like
Comment