April 20, 2024

கனடா டொராண்டோவில் தமிழர் பலி

ஸ்கார்பரோவில் Warden and Finch சந்திப்பில் அமைந்துள்ள தமிழ் கேட்டரிங் ஒன்றில் உள்ளே நடந்த கைகலப்பு , வெளியேயும் தொடர்ந்த போது ஒருவர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது . கொல்லப்பட்ட நபர் கொக்குவிலைச் சேர்ந்த கமலகண்ணன் ஆவார் . இவர் 1985 காலப் பகுதியில் கனடா வந்தவர் என்றும் , தனெக்கென நட்பு – வட்டத்தை வைத்திருப்பவர் என்பதும் அறியப்படுகிறது .  இச்சம்பவம் 05 / 04 / 2020 மாலை 3 : 22 மணிக்கு நடைபெற்றதாகவும் , இக்கொலையில் சந்தேகப்படும் நபர் 25 – 30 வயதுள்ள நபர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர் . தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றுவரும் இதேவேளை , இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தால் தமக்கு தெரிவிக்கும் படி டொரோண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர் . தொடர்பு கொள்ள – 416 – 808 – 4200