April 19, 2024

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது சத்தமாக பேசிய 5 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்!

ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசியவர்களை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளன. இதேபோல் ரஷ்யாவின் யாசான் பகுதியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்த அப்பகுதி மக்கள் வீட்டுக்கு முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு நேரத்தில் 31வயது நபர் ஒருவரின் வீட்டு ஜன்னலுக்கு வெளியே இளம் வயது ஆண்களும் பெண்களும் கூட்டமாக நின்று சந்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது நபர், அவர்களிடம் சென்று அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார்.

இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த நபர், தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்துவந்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4ஆண்கள் ஒரு பெண் உட்பட 5பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக யாசான் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.