April 24, 2024

ஈஸ்டர் முடிந்தபின் படிப்படியாக கடைகள் மீண்டும் திறக்கும்! ஆஸ்திரியா……..

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் ஈஸ்டருக்குப் பிறகு படிப்படியாக கடைகள் திறக்கும் என்று அந்நாட்டு அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் தெரிவித்தார்.

ஏப்ரல் 14ம் திகதி முதல் சிறிய கடைகள், DIY கடைகள் மற்றும் தோட்டக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று குர்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அனைத்து கடைகள், ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் சிகையலங்கார கடைகள் மே 1ம் திகதி முதல் திறக்கப்படும், அதே நேரத்தில் மே மாத நடுப்பகுதியில் உணவகங்களும் ஹோட்டல்களும் படிப்படியான முறையில் திறக்கப்படும்.

நாட்டில் ஜூன் இறுதி வரை பெரிய நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது என்று குர்ஸ் கூறினார்.

மே நடுப்பகுதி வரை வீட்டுப் பள்ளி இருக்கும், ஏப்ரல் மாத இறுதியில் பள்ளிப்படிப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.

சமூக இடைவெளி மற்றும் முகமூடி அணிவது தேவையான இடங்களில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று குர்ஸ் கூறினார்.

ஆஸ்திரியாவில் 12,051 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 204 பேர் இறந்துள்ளனர்.