April 24, 2024

திரு சபாநாயகம் இரவீந்திரன் (JPUM)

திரு சபாநாயகம் இரவீந்திரன் (JPUM)

(பிரபல சட்டத்தரணி, முன்னாள் பருத்தித்துறை நகரபிதா, முன்னாள் நீண்டகாலத் தலைவர்- தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் தரும பரிபாலன சபை, தும்பளை கிழக்கு சன சமூக நிலையம்)

தோற்றம்: 14 செப்டம்பர் 1950 – மறைவு: 04 ஏப்ரல் 2020

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாநாயகம் இரவீந்திரன் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சி.மு. கந்தசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீஸ், பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாசுகி, தேவமாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகுந்தலா, சபாரத்தினம், சத்தியசீலன், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அபிரா, ஆருஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
வீடு Phone : +94 21 226 4795
சபாரத்தினம் – சகோதரன் Mobile : +94 77 181 6958   
பிரதீஸ் – மகன் Mobile : +44 780 880 5136