April 19, 2024

அரியாலையில் தொற்று நீக்கி விசிறல்

யாழ்ப்பாணம் – அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று (03) காலை முன்னெடுக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

காெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள பூம்புகார் கிராமத்தில் சுவிஸ் பாஸ்டரின் ஆராதனையில் பங்கேற்ற 18 குடும்பங்கள்  சுயாதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.