
இந்த சுற்றிவளைப்பிற்கு முன்னர் அந்த பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுக்குள் 4 பேர் மறைந்திருப்பதாகவும், அவர்கள் தப்பிக்க முடியாதளவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அந்தப் பகுதியில் முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த முகாம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.