
கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை தேவாலய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் பிராத்தனை செய்வதாகவும், பொது மக்கள் மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்ய எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு உட்பட ஏனைய பிரசேதங்களில் இடம் பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையான கண்டிக்கத்தக்கது.