போரின் போது கணவன்மாரை இழந்து, பிள்ளைகளுடன் தங்கி வாழ்கின்ற பெண்கள் பல இன்னல்களை சந்திக்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுரண்டல் மற்றும் வன்முறைகளுக்கு அதிகம் முகம் கொடுக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் பாதுகாப்பு படையில் சேவைபுரியும் பெண்கள் தங்கள் தொழிலுக்காக படைவீரர்கள் மத்தியில் தங்கி வாழவேண்டியுள்ளதால், பாலியல் தொல்லைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்பு படையில் சேவை புரியும் பெண்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் இராணுவத்தினரோடு பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என அதிகமானோர் நினைத்திருந்தாலும் இதற்கு எதிர்மாறான கருத்தை அடையாள அமைப்பின் ஆய்வு ஏற்கனவே முன்வைத்துள்ளது.