கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெமடோல் எனப்படும் போதை மாத்திரைகள் 600 ஐ விற்பனைக்காக வைத்திருந்த போதே கற்பிட்டி, ஏத்தாலே பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் குறித்த வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்டவர் என்று கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.