2009 இறுதிப்போரில் இரணைப்பாலை மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் புதைக்கப்பட்டனர்.
அங்குதான் மாவை சேனாதிராசா தலைமையிலான காற்பந்து இறுதிச்சுற்று
போட்டிகள் நடைபெற இருக்கிறது.
எமது மக்களின் பிணக்குவியலில் மீது ஏறி மிதித்து அவர்களின் தியாகத்தை சிங்கள மற்றும் இந்திய பயங்கரவாத அரசிடம் விலை பேசும் இதுபோன்ற ஈனர்களை எதைக்கொண்டு அடிப்பது…???
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வில் இன்னமும் மாற்றம் வரவில்லை.
காணாமல் போன உறவுகளைத் தேடி போராட்டம்,காணிகளை மீட்க போராட்டம்,எதிர்கால வாழ்வைத் தேடி போராட்டம் இப்படி தமிழ் மக்கள் தமது வாழ்வைத் தொலைத்து போராடிக்கொண்டு இருக்கின்றனர் அவர்களின் பிரச்சனையை தீர்க்க துப்புக்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள் விளையாட்டுப்போட்டி நடாத்த முயல்கின்றனர்.
இப்போது எமது மக்களுக்கு தேவையாது தான் இந்த விளையாட்டுப்போட்டியா..???இல்லை தமிழர் உரிமையா..????
சிங்களக் கால்களை நச்சி தமிழர்களை நசுக்கத்துடிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களின் பெயரை சிங்களக் கூட்டமைப்பு என்று பெயர் மாற்றம் செய்வதே இவர்களின் செயல்களுக்கு பொறுத்தமாக இருக்கும்.
தமிழா நாம் விழிப்புடன் செயல்பட்டு துரோகத்தை கருவறுக்க வேண்டும்.