März 28, 2024

புல்மோட்டை கடற்கரையில் பேரினவாத புத்தர் .

புல்மோட்டை அரிசிமலை கடற்கரை பகுதியில் புதிதாக புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு  தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும்  நிலையை நெருங்கியுள்ளதை ஒளிபடங்கள் மூலம் அவதானிக்கமுடிகின்றது

தமிழீழ தலைநகர் திருகோணமலையிலுள்ள அரிசிமலை  பிரதேசம்   பௌத்த மயமாக்கலை   எதிர்கொண்டு வருகின்றது 

இப்பகுதியில தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரைக்கான  (Asiri Kanda Purana Rajamaha Viharaya) அடிக்கல்    மஹிந்த ராஜபக்சே அதிகாரத்தில் நாட்டப்பட்டு இருந்தது 

முக்கிய குறிப்பு :-

 பௌத்த பிக்குகள் தவிர சாதாரண மக்கள் இப்பகுதியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு இருக்கின்றது 

இப்பகுதி எங்கும் புத்த துறவிகளுக்கானது என்றும் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு இருக்கிறது

இங்கு பிக்குகளுக்கான தியான மண்டபங்கள் , வாழ்விடங்கள் உட்பட பல அமைக்கப்பட்டு இருக்கின்றன. 

இதுமட்டுமல்லாது இப் பகுதியை சூழ பல இடங்களிலும் புத்தர் சிலைகளையும் சிறிய பௌத்த கோவில்களை  நிறுவி இருக்கின்றார்கள் 

இங்குள்ள பாணமுரே திலகவன்ச நாயக்க தேரர் (Panamure Thilakawansa Nayaka Thera)  பௌத்தமயமாக்களின் பிரதான சூத்திரதாரியாக இருக்கின்றார் 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert