April 25, 2024

புலிகளின் குரல் வானொலி பொறுப்பளாராக இருந்த ஜவான் அவர்களின் தந்தை மரணம்.!

புலிகளின் குரல் வானொலி பொறுப்பளாராக இருந்த ஜவான் அவர்களின் தந்தை உயிரிழந்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் வானொலிக்கு பொறுப்பாளராக இருந்த தளபதி ஜவான் அல்லது தமிழன்பன் அவர்களின் தந்தை கந்தையா நாகரத்தினம் 29.01.2023 அன்று இயற்கை மரணம் அடைந்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை 2 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த நாகரத்தினம் அவர்கள்
விடுதலைப்போராட்டத்திற்காக தனது பிள்ளைகளில் 2 பிள்ளைகளை மாவீராக கொடுத்துள்ளார்.

புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளரகவும் இறுதி யுத்தத்தில் காணாமல் போன ஜவான் அல்லது தமிழன்பன் மற்றும் ஒரு மகனை போராளியாகவும் நாட்டிற்கு அர்பணிபத்த தந்தை முல்லைத்தீவு – முள்ளியவளையில் வசித்து வந்த நிலையில் இயற்கை மரணம் அடைந்துள்ளார்.

இவர் சிறு வயதிலிருந்து முள்ளியவளை கட்டுவிநாயகர் கோவிலுக்கு சிறந்த தொண்டனாகவும் பக்தனாகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert