April 25, 2024

பரீட்சை நாட்களிலும் மின் வெட்டு தொடரும்!

2022 உயர்தரப் பரீட்சைகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள நிலையிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert