März 29, 2024

உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையிலும் , தொடரும் மின் வெட்டு!

இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை  மின்வெட்டை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகலில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

நாளை மறுதினம் திங்கட்கிழமை கல்வி பொது உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert