März 28, 2024

இந்து சைவத் திருக்கோவில் ஓன்றியம் தெரிவு

 சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின்  பொதுக் கூட்டம், பெருந்தொற்றுப் பேரிடர் காரணமாக, மூன்று ஆண்டுகளின் பின்னதாக கடந்த ஜனவரி மாதம் 08ந் திகதி, பேர்ண் மாநகரில் அமைந்துள்ள பல்சமயக் கூடத்தின் உரையாடல் மண்டபத்தில் நடந்துள்ளது.

ஞானலிங்கப் பெருமானின் வழிபாட்டினைத் தொடர்ந்து ஒன்றியத் தலைவர் சிவத்திரு. தர்மலிங்கம் சசிகுமார் ஐயா அவர்களின் தலைமையுரையுடன் பொதுக் கூட்டம்  நடைபெற்றிருந்தது. ஒன்றியத்தின் கடந்தகாலச் செயற்பாடுகள் குறித்து, தலைவர் சிவத்திரு. தர்மலிங்கம் சசிகுமார் மற்றும் செயலாளர் திரு. இராதாகிருஸ்ணன் ஆகியோர் உரையாற்றுகையில், சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்களுக்கும், iசைவப்பெருமக்களுக்குமான ஒரு சுதந்திரமான கூரையமைப்பாக உருவாக்கம் பெற்ற ஒன்றியத்தில், சுவிற்சர்லாந்தின் 26 ஆலயங்களின் பிரதிநிதிகள் இணைந்துள்ளதையும், அவ்வாறு இணைக்கப்பெற்ற சிறிது காலத்துள்ளேயே ஒரு பெருவிழாவினை முன்னெடுத்ததும், அதன் பின்னதாகப் பெருந்தொற்றுக் காலத்தில், பொதுவெளியில் ஒன்று கூட முடியாதவிடத்தும், இணையவழியில் கலந்துரையாடி இயன்றவரையில் பொதுப்பணிகளை முன்னெடுத்திருப்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு தெரிவில்

தலைவர் : திரு. சி.இராதாகிருஸ்ணன் – சூரிச் சிவன் கோவில். 

உபதலைவர் : சிவத்திரு. த.சசிக்குமார் ஐயா – பேர்ண் ஞானலிங்கேசுரர் கோவில்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert