März 28, 2024

சிவாஜிக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து அழைப்பு!

தீலிபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற கட்டளை வழங்கப்பட்டுள்ளது
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்றைய தினம் சென்ற பொலிஸார் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர்.
தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு நீதிமன்ற தடையை மீறி தீலிபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கையில் வைத்து கடந்த 2020 செப்டம்பர் 15ம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும்  தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவுகூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ்  யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட எம்.கே. சிவாஜிலிங்கத்தை மன்று  எச்சரித்து 2 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்திருந்தது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert