April 24, 2024

தேர்தலை தாமதப்படுத்த ஆணைக்குழு ஆதரவளிக்காது!

எல்லை நிர்ணய பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலை தாமதப்படுத்த ஆணைக்குழு ஒருபோதும் ஆதரவளிக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, கூறியுள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை, தெரிவு செய்யப்படாத அதிகாரிகளுக்கு வழங்க முடியாது. தேர்தல்களை தாமதப்படுத்த எல்லை நிர்ணய குழுவை பயன்படுத்த முடியாது என்றும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert