April 25, 2024

தமிழர்பகுதியில் சோகம்; மகனை காணாது மற்றுமொரு தாயார் உயிரிழப்பு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாயார் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் வவுனியா, கல்மடு, பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே நேற்று மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்குச் ) சென்ற வேளை 2007.05.17 அன்று கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

தமிழர்பகுதியில் சோகம்; மகனை காணாது மற்றுமொரு தாயார் உயிரிழப்பு! | Another Mother Lost Her Son

மகனைத் தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டகளிலும் குறித்த தாயார் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் தனது மகனை 15 வருடங்களாகத் தேடி அலைந்த தாயார் நோய் காரணமாக மகனைக் காணாமலேயே உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert