April 25, 2024

மாவீரர் குடும்பங்களை கௌரவிக்க திட்டம்!

மாவீரர்களது தியாகங்களை போற்றும்வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களது பெற்றோர்களை வீடுகள் தோறும் தேடிச்சென்று கௌரவிக்கும் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளனர்.மாவீரர்களது பெற்றோரது வீடுகளிற்கு செல்லும் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் அவர்களை கௌரவிக்கவுள்ளனர்.

இதனிடையே கிழக்கில் மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதை இன்று காலை இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளது.

எனினும் மீண்டும் பதாதைகள் கிரான் பிரதான வீதியின் சுற்றுவளைவு மையப் பகுதியில் இன்று காலை இரண்டு பக்கங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert