April 19, 2024

பாலியல் வன்கொடுமை: நீதிமன்றில் பிணை மறுப்பு: விளையாடத் தடை!!

பாலியல் வன்கொடுமை புகாரில் கைதாகியுள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து விதமான துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதித்துள்ளது அந்நாட்டு ஸ்ரீ லங்கா துடுப்பாட்ட நிறைவேற்றுக்குழு.

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான 29 வயது ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிட்னி காவல்துறையினரால் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டார்.

31 வயதாகும் குணதிலகாவிற்கு இலங்கை அணியில் இனி இடமில்லை என அந்நாட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு  தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணைக் கோரிக்கையினை அவுஸ்திரேலியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert