März 29, 2024

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் முன்னெடுப்பு .

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர்  துயிலுமில்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிரமதானப் பணி.

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  மட்டக்களப்பு  மாவடிமுன்மாரி   மாவீரர்   துயிலும் இல்லம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

இன்று காலை  10 மணியளவில்  சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 மாவீரர்களுக்கு சுடரேற்றி, மலர் தூவி, அக வணக்கம் செலுத்தி சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தச் சிரமதான பணியில்    பொதுமக்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert