März 28, 2024

குஜராத்தில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 68 பேர் பலி!!

இந்தியாவில்குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் அமைந்துள்ள தொங்கு நடை பாலம் உடைந்து மச்சு ஆற்றில் வீழ்ந்தததில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் ஆற்றில் விழுந்துள்ளனர்.

ஆற்றில் சமநேரத்தில் 400 பேர் இருந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்தார்.

பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து திறக்கப்பட்ட சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

230-மீட்டர் (754 அடி) நீளம்கொண்ட பாலம் காலனித்துவ கால கிராசிங் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 18:40 மணிக்கு (13:10 GMT) பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. 

இருள் சூழ்ந்ததால், ஆற்றங்கரையில் இருந்த பார்வையாளர்கள் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்க முயற்சிக்களை காட்சிகள் காட்டுகின்றன. தண்ணீரில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் பாலத்தின் கம்பி எச்சங்களின் மீது ஏறுவதைக் மற்றொரு காட்டுகிறது.

அண்டை மாவட்டங்களில் இருந்து அவசர உதவியாளர்கள் மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்டுள்ளனர்.

பாலம் இடிந்து விழுந்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, ஆனால் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert