März 29, 2024

இலங்கைக்கு மனிதாபிமான உதவி: 1.5 மில்லியன் யூரோக்களை விடுவித்தது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்து வரும் சமூக – பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை விடுவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிதியானது, உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யும் பல்நோக்கு பணத் தலையீடுகளில் முக்கியமாக கவனம் செலுத்தும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த மனிதாபிமான உதவியானது உடனடி ஆதரவு தேவைப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை இலக்குவைத்து வழங்கப்படுகிறது.

„இலங்கை மக்கள் நீண்டகால சமூக-பொருளாதார நெருக்கடியின் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர், இது வளங்களை பெருகிய முறையில் சோர்வடையச் செய்கிறது. மில்லியன் கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது.

இந்த புதிய மனிதாபிமான நிதியுதவியுடன், ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அதன் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என நெருக்கடி முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஜெனெஸ் லெனார்சிஸ் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert