April 25, 2024

பேச கூட அனுமதியில்லை:பிரீஸ்!

இலங்கை அரசாங்கம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதைப் போல்  பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கவில்லை என  ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியே கூடி இன்று (21) ஊடகவியலாளர்களிடம்  கருத்துக்களை வெளியிட்டனர்.

இதன்போது கருத்துரைத்த ஜிஎல் பீரிஸ், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை தற்போது பாராளுமன்றத்திற்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert