März 28, 2024

ரெலோ-ரணில் :கண்டிக்கிறார்கள் பலரும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (03) ரெலோ அமைப்பினர் பேச்சு நடத்தியது இராஜதந்திரமற்ற நடவடிக்கையென விமர்சித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா.

ரெலோவின் முன்னாள் தலைவரான சிறீகாந்தா யாழ்ப்பாணத்தில் வைத்து இத்தகைய கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும் சந்திப்பினை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் சந்திப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert