März 29, 2024

முல்லைத்தீவு யுவதி கடத்தல் விவகாரம்; ஆறுபேர் கைது

 கடந்த 17ஆம் திகதி முல்லைத்தீவு – குமுழமுனை பிரதேசத்தில் யுவதி ஒருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரில் வந்த இளைஞர் கும்பலொன்று, யுவதியை கடத்திச் சென்றுள்ளமை தெரியவந்தமையை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடத்தலுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று இளைஞர்களை கைதுசெய்தனர்.

இந்நிலையில், கடத்தப்பட்ட யுவதி அவர் காதலித்த இளைஞனுடன் ஒன்றாக இருக்கின்ற ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இளைஞனின் தாய் மற்றும் சகோதரி  கைது

இதனையடுத்து யுவதியும் இளைஞனும் திருகோணமலையில் விடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி அவர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்ததுடன், இளைஞனின் தாய் மற்றும் சகோதரியையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

மேலும் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டு மற்றும் கடத்தல் சம்பவத்துக்கு உதவியவர்கள் என மொத்தமாக 06 பேர் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை நாளை (01) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், யுவதி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert