April 19, 2024

பயங்கரவாதத் தடைச் சட்டம்: ஐ.நாவில் முறையிடுவோம்!

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் எதிர்ப்புகளை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதான பேசுப்பொருளாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பேர வாவியில் தள்ளியவர்களை தேடும் பொலிஸார், அமைதியானப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தியவர்களை தேடவில்லை என்பது பாரதூரமான பிரச்சினை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert