März 29, 2024

தொடருந்து பழுதடைந்தது: ஈரோ சுரங்கவழியில் சிக்தித் தவித்த பயணிகள்!

பிரான்சிலிருந்து இங்கிலாந்து சென்றுகொண்டிருந்த ஈரோ சுரங்கவழி  (Eurotunnel) தொடருந்து பழுதடைந்ததால் பயணிகள் பல மணி நேரம் சுரங்கத்தினுள் சிக்கித் தவித்ததாக இங்கிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. இதேநேரம் தொடருந்து பழுதடைந்ததை நிறுவனம் உறுதி செய்தது. மேலும் அவர்கள் பயணிகளை தனி ஷட்டில் சேவைக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் மக்கள் முனையத்திற்கு பயணிக்க வேண்டாம், ஆனால் புதன்கிழமை காலை 6 மணிக்குப் பிறகு வருமாறு அறிவுறுத்தப்பட்டது.

கடலுக்கு அடியில் உள்ள அவசரகால சேவை சுரங்கப்பாதையில் மக்கள் நடந்து செல்வதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert