März 29, 2024

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்

செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்றய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி சுடர் ஏற்றி வணங்கினர்.

அத்தோடு செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளின் நிழற்படங்களை கண்காட்சியாக நிறுத்தி ஈன இரக்கமற்ற

சிங்கள பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தினர். இளையோர்களால் பல்லின மக்களுக்கு யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்தோடு செஞ்சோலை படுகொலையை பற்றிய பதிவுகளும் யேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert