April 25, 2024

ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மியான்மரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

சந்தை மதிப்பிற்குக் குறைவாக அரச நிலத்தை வாடகைக்குக் கொடுத்ததாகவும், தொண்டு நிறுவன நன்கொடைகள் மூலம் சொந்த வீட்டைக் கட்டியதாகவும் குற்றம் சாட்டு நிரூபிக்கப்பட்டு இராணுவ நீதிமன்றால் தண்டனை வழங்கப்பட்டது.

77 வயதான பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஏற்கனவே தேசத்துரோகம், ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததாக ஆங் சான் சூகி ஆட்சியில் எம்.பி.யாக இருந்தவா் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சா்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

நவம்பர் 2020 பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் அகற்றிய பின்னர், பிப்ரவரி 2021 இல் சூ கி முதன்முதலில் தடுத்து வைக்கப்பட்டார்.

அவர் மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் சுமத்தப்பட்டுள்ள ஏராளமான குற்றச்சாட்டுகள், இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை சட்டப்பூர்வமாக்குவதற்கும் அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்ட தேர்தலில் சூகியை அகற்றுவதற்கும் ஒரு முயற்சி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert