April 24, 2024

ஒக்டோபர் 13:திகதிக்கு பின்னர் ரணில் ?

தூய

கோத்தபாய கதிரையினை விட்டோடுவது தொடர்பில் சாத்திரம் சொன்ன சாத்தியார் ரணில் தொடர்பில் தற்போது தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜூலை 12 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை விட்டுவிலக நேரிடும், எதிர்பாராத ஒருவர் ஜனாதிபதியாகுவார், அவரால் இரண்டு மூன்று மாதங்களுக்கே பதவியில் இருக்க முடியும் என ஜூலை 7 ஆம் திகதி அரசியல் நிலவரங்களை கணித்து கூறிய பிரபல ஜோதிடர் கே. சரத்சந்திர தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நேரம் மிகவும் மோசமானது எனவும், ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பதவியை விட்டு செல்ல வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளார், ஜனவரி மாதத்திற்கு பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert