April 24, 2024

ரணிலும் விரட்டப்படுவார்:அனுர

 ராஜபக்சர்கள் மக்களால் எப்படி விரட்டப்பட்டார்களோ அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி விரட்டியடிக்கப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. எச்சரித்துள்ளார்.

காலிமுகத்திடல் மக்கள் போராட்டம் ஜூலை 14ஆம் திகதி வெற்றியுடன் முடிந்து விட்டது என்றும், அதன் பின்னர் அங்கு கிளர்ச்சிக்கான ஆயத்தங்களே நடைபெற்றன என்றும், அதனையே படையினர் அடக்கியுள்ளனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

‘ரணில் வீட்டுக்குப் போ’ என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை. இதற்கு மதிப்பளித்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியிலிருந்து உடனடியாக விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும். இல்லையேல் ராஜபக்சர்கள் போல் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9ஆம் திகதி மக்களால் அவர் வீட்டிற்கு விரட்டியடிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகியிருந்தார். ஜூன் 9ஆம் திகதி பசில் ராஜபக்ச விலகியிருந்தார். ஜூலை 9ஆம் திகதி கொழும்பில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தால் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச கடந்த 14ஆம் திகதி பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert