இலங்கை விடயம் இந்தியாவும் அவதானமாக இருக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையில் கட்டுக்கடங்காதவர்களின் நடத்தை குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாக கட்சியின் மூத்தலைவரும் எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி, இந்த எச்சரிக்கையை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவிக்கையில்:-

கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டத்தினர், நக்சல்கள், ஜிகாதிகள், சமூகவிரோதிகளால் வழி நடத்தப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே இந்த குழுக்கள் இலங்கையின் சீரழிவு மற்றும் தமது நாட்டின் எதிர்கால தாக்கம் குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert