April 19, 2024

சுமூகமான அதிகார மாற்றம்:பர்ஹான் ஹக்!

இலங்கை அரசாங்கத்தின் சுமூகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் கோரியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்தும் செயலாளர் நாயகம், உன்னிப்பாக அவதானித்து வருவதாக, ஐக்கிய நாடுகளின் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சார்பாக, பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் அவர் அழைப்பு விடுப்பதாக ஹக் தெரிவித்துள்ளார்.

அனைத்து வன்முறைச் செயல்களையும் பொதுச்செயலாளர் கண்டித்துள்ளார்.அமைதியைப் பேணுவதற்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதாகவும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சார்பாக, பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert