April 23, 2024

வெளியே வா: கோத்தா வீட்டுக்கு முன் போராட்டம்: ஹிருணிகா கைது!

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது  பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார்.

இதன்போது அவருடன் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பத்து பேரில் ரெஹான் ஜெயவிக்ரமவும் ஒருவர்.

ஹிருணிகா தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‚கோட்டாபய ராஜபக்ச அவர்களை சந்திக்க வேண்டும்‘ என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

ஹிருணிகா பிரேமச்சந்திர, இன்று  புதன்கிழமை கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அவரது முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட நேரடி காணொளியில், ஹிருணிகா ஜனாதிபதியை வெளியே வருமாறு கேட்டுக்கொண்டு வாயிலுக்கு முன்னால் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே ரணிலை வெளியே வர கோரி அவர் முன்னெடுத்த போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert