April 19, 2024

உக்ரைனிலிருந்து வெளியேறும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கத் தயார்

உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
துருக்கி அங்காராவில் ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கூறும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கருங்கடலில் தானிய ஏற்றுமதியை மீட்டெடுக்கும் சுமை  இருப்பதாகவும்,  எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.

ஏனெனில் மொஸ்கோ ஏற்கனவே தேவையான உறுதிமொழிகளைச் செய்துள்ளதால், உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதற்கு உத்தரவாதம் அளிக்க தயாராக உள்ளது என்றார்.

துருக்கிய பிரதிநிதி, கடல் வழித்தடத்தில் உக்ரேனிய தானிய ஏற்றுமதியை மறுதொடக்கம் செய்வதன் மூலம் உலகளாவிய உணவு நெருக்கடியை எளிதாக்குவதற்கான ஐநாவின் திட்டம் நியாயமானது. மேலும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் கூடுதல் பேச்சுவார்த்தைகள் தேவை என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert