März 28, 2024

கடற்படைக்கு முல்லைதீவில் காணி சுவீகரிப்பு மக்களால் தடுத்து நிறுத்தம்!

இறுதி யுத்த சாட்சியங்கள் முடங்கியுள்ள வட்டுவாகல் கிழக்கு பகுதியில் கோட்டபாய கடற்படை தளத்திற்காக தனியார் காணிகளை அளவீடு செய்ய முற்பட்ட போது காணி உரிமையாளர்காளாலும், தமிழ் மண் காப்பாளர்களாலும் இன்று செவ்வாய்கிழமையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை கப்பல்  என்னும் கடற்படை முகாமுக்கு காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு இன்று (07) நில அளவை திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

இன்றையதினம் காலை 8 மணிக்கு  காணிகளை சுவீகரிப்பதற்க்காக நில அளவை திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில்  காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு  எதிர்ப்பை வெளியிட்டு நில அளவை திணைக்கள வாகனத்தை கடற்படை முகாமுக்குள் செல்ல விடாது கடற்படை முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  

காணி உரிமையாளர்களில் 15 பேர் தமது காணிகளை கடற்படை முகாம் தேவைக்காக வழங்க முன்வந்திருப்பதாகவும், அதனையே அளவீடு செய்ய வந்திருப்பதாக நில அளவையாளர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெரிவித்ததோடு, காணிகளை வழங்க முன்வந்தவர்கள் என தென்பகுதியை சேர்ந்த மூன்று  காணி உரிமையாளர்களும் அவ்வேளையில் பிரசன்னமாகியிருந்தனர். இருந்த போதிலும் 15 பேர் காணிகளை வழங்க முன்வந்திருப்பதாக நில அளவை அதிகாரி தெரிவித்திருந்த போதிலும் ஏனைய எவரும் அவ்வேளையில் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.
தென் இலங்கையைச்சேர்ந்த ஆசிறீ பெனாண்டோ, கிறீஷ்டி பெனாண்டோ,சீனாவைச்சேரந்த .சாங் ஆகிய மூன்று பேரும் தமக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு வழங்குவதற்கு உடன்பட்டுள்ளனர்

அவ்வாறு 15 பேர் காணி வழங்க முன் வந்திருப்பின் அதே பகுதியில் எமது காணிகளும் கடற்படையதினரால் வேலி போட்டு மறித்து அடைக்கப்பட்டுள்ளது.

எனவே கடற்படைமுகாமுக்கு காணி வழங்க முன்வந்தவர்களுக்கு காணிகளை அளவீடு செய்து வழங்கும் முன் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள எமக்குரிய காணிகளையும் அடையாளப்படுத்தி அளவீடு செய்து எமக்கு வழங்கிவிட்டு கடற்படை முகாமுக்கு  காணி வழங்க முன் வந்தவர்களின் காணிகளை அளவீடு செய்யுமாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நில அளவையாளரிடம் தெரிவித்ததோடு, இதற்கான கோரிக்கை கடிதத்தையும் கையொப்பமிட்டு வழங்கியதையடுத்து நில அளவையாளர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

நில அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டம் மேற்கொண்ட போது அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் பொதுமக்களை தள்ளி மற்றும் இழுத்துவிழுத்தி இடையூறுகளை ஏற்படுத்தியதோடு புலனாய்வாளர்கள் , கடற்படையினர் மற்றும் தென்பகுதியிலிருந்து வருகைதந்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்களை தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.

கடற்படை முகாம் அமைந்துள்ள 617 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் நில அளவை திணைக்களத்தினரின் ஒத்துழைப்போடு அளவீடு செய்து காணி சுவீகரிப்புக்கு  கடற்படையினரால் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில்  மக்களின் எதிர்ப்பு போராட்டங்களால் அளவீடு முயற்சிகள்  கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert