April 19, 2024

யாழ்ப்பாண விமான நிலையம் மூடப்படாது:ரணில்

இந்திய அரசின் அழுத்தங்களை தாண்டி பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பொருளாதார நெருக்கடி காரணமாக மூடவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளிவந்திருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவலை மறுதலித்துள்ளார்

“இலங்கையிலுள்ள எந்தவொரு விமான நிலையத்தையோ, தொழிற்சாலையையோ, அரச நிறுவனத்தையோ மூடும் திட்டம் எதுவுமில்லை” என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நல்லாட்சி காலத்தில் திறக்கப்பட்டு தமிழகத்துக்கான சேவைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.எனினும் கடந்த இரண்டுவருடங்களிற்கு மேலாக தமிழகத்திற்கான விமான சேவைகள் மீள ஆரம்பிக்கவில்லை. 

இதனை காரணமாக முன்வைத்து விமான நிலையத்தை மூடிவிட முயற்சிகள் தொடர்கின்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert