April 19, 2024

உக்ரைன் சீவிரோடோனெட்ஸ்க் நகரில் குறைந்தது 1,500 பேர் பலி!

உக்ரேனிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டொன்பாஸில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஒரே பகுதியான சீவிரோடோனெட்ஸ்க் உள்ளது.

சீவிரோடோனெட்ஸ்க் நகரைச் சுற்றி ரஷ்யப் படைகளுக்கும் உகரைனியப் படைகளுக்கும் நடக்கும் சண்டைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த மோதலில் குறைந்தது 1,500 பொதுமக்கள் உயிரிழந்தனர் என்றும் 60% குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன அந்நகரத்தின் நகரமுதல்வர் தெரிவித்தார்

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய இராணுவத்தின் செலவை மீறி, டான்பாஸ் பகுதியில் மெதுவாக ஆனால் தெளிவாக முன்னேறி வருவதாகக் கூறினார்.

அதே நேரத்தில் ரஷ்யா சார்பு பிரிவினைவாதிகள் மூலோபாய நகரமான லைமனைக் கைப்பற்றியதாகக் கூறுகின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert