März 29, 2024

துயர் பகிர்தல் திருமதி.கோசலியா சொர்ணலிங்கம்

திருமதி.கோசலியா சொர்ணலிங்கம் அவர்களுடைய மரண செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் அவருடன் குடும்ப நண்பர்களாக பழகிய அந்த நாட்களை எண்ணி பார்க்கிறேன் 1984 ம் ஆண்டு அவர் யேர்மனிக்கு வந்த போது அவருடைய கணவருடன் நானும் Düsseldorf சென்று அழைத்து வந்த நாளை எண்ணிப்பார்க்கிறேன் Mülheim an der Ruhr நகருக்கு அவர்தான் முதல் வந்த பெண் என்ற பெருமைக்குரியவர்

அவர்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நினைவலைகள் இன்றும் பசுமையான நினைவுகள் அண்மைக்காலமாக நான் இணைந்து பணியாற்றுகின்ற
STS தமிழ் தொலைக்காட்சியில் பல கவிதை நிகழ்ச்சிகளிலும் இணைந்து சிறப்பித்த படைப்பாளி மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் ஆசிரியருமான திருமதி.கோசலியா அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் அக்கா என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்த ஆத்மா

எம்மை அனாதை ஆக்கி சென்றதன்றோ
உங்கள் நினைவை செஞ்சக்குளி சுமக்க
அமைதி கொண்டு துாங்குவது எனக்கா
நித்தம் நினைவிருக்கா
நிவராத இடம் தேடி செற்றவரே
உங்கள் அத்மா சதந்தி கொள்ள
இறைனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஆழ்ந்த அனுதாபங்களுடன்
முல்லைமோகன் மற்றும்
STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினரும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert