April 18, 2024

காஸ் கேட்டால் இராணுவம் தாக்குமாம்!

சமையல் எரிவாயுவேண்டுமென கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் இராணுவத்தினரின் உதவியை நாடினர்.

நாங்கள் இன்று காலை முதல் வீதிகளில்  நிற்கின்றோம், எங்களிற்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை – இவர்கள் செல்வந்தர்களிற்கும் ஹோட்டல்களிற்கும் சமையல் எரிவாயுவை வழங்குகின்றனர் என நான் கருதுகின்றேன் என போராட்டத்திலுள்ள பெண்மணியொருவர் தெரிவித்தார்.

சமையல் எரிவாயுவை வழங்குங்கள் என தெரிவித்து பெண்களும் முதியர்வர்களும் கோசமெழுப்பினர்.

வீட்டில் சிறுவர்கள் உள்ளனர்-எங்களால் அவர்களிற்கு உணவு சமைக்க முடியவில்லை-ஒரு மாதகாலமாக நாங்கள் சமையல் எரிவாயுவை பெறுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என பெண்ணொருவர் தெரிவித்தார்.

பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில்விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தைமுன்னோக்கி நகர்த்துவதே தனது முதல் முன்னுரிமைக்குரிய விடயம் என ஊடகங்களி;ற்கு தெரிவித்திருந்தார்.

நான் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காணவிரும்புகின்றேன்-பெட்ரோல் டீசல் மின்சாரம் மக்களிற்கு கிடைப்பதை உறுதி செய்யப்போகின்றேன் என அவர் தெரிவித்திருந்தார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert