April 25, 2024

நடைப்பிணமாக தோன்றிய கோத்தா!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையையும் மக்கள் மனதையும் வெல்லக்கூடிய பிரதமர் உள்ளடங்கிய புதிய அமைச்சரவையை இவ்வாரத்துக்குள் நியமிப்பதோடு, நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யவும் ஒத்துழைப்பு வழங்குவேன் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நாட்டு மக்களிற்கான உரையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரையில் இந்த வாரத்திற்குள் பாராளுமன்றம் மற்றும் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமித்தல் 

19 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுலாக்கி ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்தல்

விரைவில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் தொடர்பில் அறிவித்துள்ளார்.

இதனிடையே முற்றாக களையிழந்த நடைப்பிணமான ஒருவராக கோத்தா தோன்றி உரையாற்றியிருந்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert