கோட்டா பதவி விலகினால் சஜித் பதவி ஏற்பார் – கிரியல்ல: ஆதரவளிக்க நாங்கள் தயார் – தயாசிறி

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமராக பதவியேற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க, சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியும் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert