März 28, 2024

வழமை மறுப்புப் போராட்டத்தால் முடங்கியது மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று வழமை மறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வழமை மறுப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய இப்போராட்டம் நடந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அரசாங்கத்தில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று கோரியே வழமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து வணி நிலையங்கள், சந்தைகள், அரச நிர்வாகங்கள், பாடசாலைகள், போக்கவரத்துகள் என அனைத்தும் மூடப்பட்டும் நிறுத்தப்பட்டும் வழமை மறுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert