April 20, 2024

காணாமல் ஆக்கப்பட்ட மகன் மருமகன் பேரனை தேடியலைந்த தாய் மரணம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடிவந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த செல்லையா செல்வராணி வயது 75 என்ற தாயே உயிரிழந்துள்ளார்.

இவரது மகன்- தங்கராசா தயாபரன் வயது 41 , மருமகன்- தம்பு தியாகராசா வயது 56, பேரன்- தியாகராசா மனோகரன் வயது 31 ஆகிய மூவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளத்தில் விறகுவெட்ட சென்ற போது இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இவர்களைத் தேடி வவுனியாவில் கடந்த 1898 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.

இந்நிலையில் மூவரையும் காணாமலேயே அவர் நேற்று உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert