கோத்தா இருக்கும் வரை இடைக்காலம் சாத்தியமில்லை:ஜேவிபி!

ஒட்டுமொத்த மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஜே.வி.பி. இணங்காது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஆனால்,  அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜே.வி.பியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், இந்த அரசும் பதவி விலகவேண்டும். இதுதான் மக்களின் கோரிக்கை. எமது நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.

அவர்கள் பதவி விலகிய பின்னர் குறுகிய காலப்பகுதிக்கு இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert